sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தைப்பூச விழாவுக்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

/

தைப்பூச விழாவுக்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

தைப்பூச விழாவுக்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

தைப்பூச விழாவுக்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 23, 2024 12:24 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;தைப்பூசத்தையொட்டி, பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கி, நெரிசலை தவிர்க்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நடைபெறும் தைப்பூச விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவுக்கு, பாதயாத்திரையாகவும், பஸ்களிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்கின்றனர்.

நடைபயணமாக செல்பவர்கள் தரிசனம் முடித்து விட்டு திரும்ப வரும் போது, போதிய பஸ்கள் இல்லாமல், தவிக்கின்றனர். இதே போல், விழாவுக்கு செல்பவர்களும், பஸ்களில் நெருக்கடியாக பயணித்து பழநிக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், குழந்தைகள், முதியவர்கள் அதிக சிரமப்படுகின்றனர். எனவே, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மேலும், பிற கிராம வழித்தடங்களிலும், சிறப்பு பஸ்கள் இயக்கினால், பக்தர்களும் பயன்பெறுவார்கள்.

போக்குவரத்து கழகத்துக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். விழாவுக்கு பிறகு சில நாட்கள் கூடுதல் பஸ் சேவையை நீட்டித்தால், பயனுள்ளதாக இருக்கும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us