ADDED : ஜூன் 19, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க வேண்டுமென, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்., தேசிய செயலாளர் கோபிநாத் பழநியப்பன் அறிக்கை:
ஐ.டி.பி.எல்., நிறுவனத்தால், இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை அமைக்கப்பட இருக்கும் எரிவாயு குழாயால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பல்லடம் விவசாயிகள், 200 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். எனவே, பல்லடம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இருகூர் முதல், வெள்ளகோவில் முத்துார் வரை சாலையோரத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.