sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'

/

'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'

'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'

'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'


ADDED : பிப் 24, 2024 12:07 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பு செயலர் நல்லசாமி அறிக்கை:

இலவசம், மானியம், சலுகை, கடன், கடன் தள்ளுபடி போன்றவற்றை விவசாய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது. விவசாயிகளுடைய வாழ்க்கை தரமும், வாங்கும் சக்தியும் கூடப்போவதில்லை. அரசு அறிவித்தபடி விவசாயிகளுடைய வருமானமும், இவற்றால் இரட்டிப்பாகி விடாது.

இவ்வாறான திட்டங்கள் விவசாயிகளுடைய தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும், விடுக்கும் சவாலே ஆகும். சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசு நடைமுறைபடுத்துவதை போல, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு தலைமையிலான விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். இதுவே அனைத்து விவசாய பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுதரும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us