/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராபி பருவ தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பயிற்சி
/
ராபி பருவ தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 19, 2024 04:22 AM

பல்லடம் : பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி கிராமத்தில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். வேளாண் உதவியாளர்கள் அஜித், முத்து செல்வன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், ''மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துக்களை, தானியங்கள் வழங்குகின்றன. உடலின் கொழுப்பு சத்தை குறைத்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. சிறுதானியங்கள் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன,'' என்றார்.
முன்னதாக, கோடை உழவு முறை, குறுகிய கால தானியங்களின் மகசூல், விதை மற்றும் வேர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது, விதை நேர்த்தி, உர செலவு குறைத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

