ADDED : செப் 26, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்தியன், பிரவீன் கவுதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றால், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.