sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

/

திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து


ADDED : ஜன 19, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், : பல்லடம், திருப்பூர் ரோட்டில் உருவான திடீர் பள்ளத்தால், வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.

அப்பகுதியினர் கூறுகையில், 'பல்லடம் - திருப்பூர் ரோட்டில், பனியன் கம்பெனி வாகனங்கள், அரசு தனியார் பஸ்கள், ஆம்புலன்ஸ்கள், டூவீலர்கள் என, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே, நேற்று திடீரென பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த பள்ளம் தோண்டப்பட்டதாகவும், இதற்காக, நெடுஞ்சாலைத் துறையில் அனுமதியும் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வழக்கமாக இந்த ரோட்டில் வந்து செல்பவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாது. இவ்வழியாக சென்ற வேன், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட பல வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின.

அனுமதி பெறாமல் தோண்டப்படும் இது போன்ற பள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us