/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காசநோய் விழிப்புணர்வு மாணவியர் ஊர்வலம்
/
காசநோய் விழிப்புணர்வு மாணவியர் ஊர்வலம்
ADDED : மார் 25, 2025 07:01 AM

திருப்பூர்; செவிலியர் பயிற்சி பள்ளி, நர்சிங் கல்லுாரி மாணவியர் உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தேசிய காசநோய் ஓழிப்பு திட்டத்தின் கீழ், மார்ச், 24ம் தேதி உலக காசநோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொது மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம் வரை, விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ரேவதி ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லுாரி, நத்தக்காடையூர், சிவபார்வதி மன்றாடியார் கல்லுாரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர் ஸ்ரீ ரமணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) கலைச்செல்வன், காசநோய் தடுப்பு பணி திட்ட மாவட்ட அலுவலர் தீனதயாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.