sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துவங்குவது எதற்கு?

/

துவங்குவது எதற்கு?

துவங்குவது எதற்கு?

துவங்குவது எதற்கு?


ADDED : பிப் 06, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;குடியிருப்பு பகுதி வழியாக பிரதான கால்வாய் உள்ள நிலையில் மேலும் ஒரு கால்வாய் கட்டும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என, கவுன்சிலர் தலைமையில் திரண்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு கவுன்சிலர் (அ.தி.மு.க.,) தமிழ்ச்செல்வி தலைமையில், வார்டு பகுதி மக்கள் நேற்று மாநகராட்சி மேயர், கமிஷனர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோரிடம் அளித்த மனு:மாநகராட்சியின் பிரதான பகுதியான வளையன்காடு, எஸ்.ஏ.பி., தியேட்டர், இ.பி., காலனி, காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பெரிய அளவிலான மழை நீர் வடிகால் உள்ளது.

இப்பகுதியில் சேகரமாகும், மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியன எங்கள் வார்டுக்கு உட்பட்ட கவிதா நகர், வ.உ.சி., நகர், ஸ்ரீ நகர், ஜெ.ஜெ. நகர், சொர்ணபுரி கார்டன் வழியாகக் கடந்து செல்கிறது.மழை நாட்களில் அதிகளவில் வரும் நீரால் இப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் ஒரு வடிகால் இப்பகுதி வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும். இதற்கு மாற்று வழியாக வேறு பாதையில் இந்த புதிய கால்வாயை அமைக்க வேண்டும். இதற்கான புதிய வழித்தடம் குறித்தும் விரிவான பட விளக்கமும் சமர்ப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us