/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கு பந்தக்கால் நடல்
/
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கு பந்தக்கால் நடல்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கு பந்தக்கால் நடல்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவிற்கு பந்தக்கால் நடல்
ADDED : செப் 25, 2025 02:36 AM
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. இதை ஏராளமானோர் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நவ., 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் விழா நடக்கும். இதில் டிச., 3ல், கோவில் கருவறை எதிரில் அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்படும்.
விழா நடக்கும், 10 நாட்களும், காலை மற்றும் இரவில், வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், 7ம் நாளில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும்.
விழாவின் பூர்வாங்க பணிகளான தேர் பழுது பார்த்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனம் பழுது பார்த்தல், வாகனங்கள் வண்ணம் பூசுதல், விழா பத்திரிகை அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு விழா பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக நேற்று, கோவில் தங்கக்கொடி மரம் அருகிலுள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர், சிவ வாத்தியங்கள் முழங்க பந்தக்கால், கோவிலின் ராஜ கோபுரம் எதிரிலுள்ள, 16 கால் மண்டப வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காலை, 7:15 மணியளவில், பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.