sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி

/

போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி

போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி

போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி


ADDED : ஜூன் 24, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோட்டில், இரவில் செயல்படும் சிக்கன் பகோடா, பானிபூரி, டிபன் கடை உள்ளிட்ட சாலையோர கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு, காக்கி பேன்ட், டீ-சர்ட் அணிந்து பைக்கில் வந்த ஒருவர், ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிவதாகக் கூறி, கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டுள்ளார்.

சில கடைகளில் பொருட்களை இலவசமாக கொடுக்க வற்புறுத்தினார். கடைக்காரர்கள், 50 -- 500 ரூபாய் வரை கொடுத்துள்ளனர். சில கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் உபயோகிப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர், மாமூல் தர மறுத்து அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டனர். அவர் தர மறுத்த நிலையில், மோசடி ஆசாமி என நினைத்து சரமாரியாக தாக்கி, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஆரணி அடுத்த கல்பூண்டியைச் சேர்ந்த கண்ணப்பன், 50; திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர் என, தெரிந்தது. மதுபோதையில், சில மாதங்களாக போலீஸ் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us
      Arattai