/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மாணவருக்கு கத்திக்குத்து முன் விரோதத்தில் மோதல் மாணவருக்கு கத்திக்குத்து
/
மாணவருக்கு கத்திக்குத்து முன் விரோதத்தில் மோதல் மாணவருக்கு கத்திக்குத்து
மாணவருக்கு கத்திக்குத்து முன் விரோதத்தில் மோதல் மாணவருக்கு கத்திக்குத்து
மாணவருக்கு கத்திக்குத்து முன் விரோதத்தில் மோதல் மாணவருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூன் 19, 2025 10:54 PM
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனில், மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு, ஆரணி அடுத்த துந்தீரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த, 15 வயது மாணவரும், கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த, 15 வயது மாணவரும், 10ம் வகுப்பு படித்தனர்.
ஒரே வகுப்பில் படித்த இருவருக்கும், அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
நேற்று காலை வழக்கம் போல், இருவரும் பள்ளிக்கு நடந்து சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
இதில், துந்தீரீகம்பட்டு கிராம மாணவர், கல்லேரிப்பட்டு மாணவரை கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
உடனிருந்த மாணவர்கள் மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.