ADDED : பிப் 24, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே, மதுரை பைபாஸ் சாலையில், சென்ட்ரல் வங்கி அலுவலகத்துடன் இணைந்த ஏ.டி.எம்., உள்ளது. பைபாஸ் சாலையில் உள்ளதால், இந்த ஏ.டி.எம்.,க்கு காவலாளி கிடையாது.
நேற்று அதிகாலை, 4 மணியளவில், இந்த ஏ.டி.எம்.,க்கு வந்த, இரு திருடர்கள், உள்ளே சென்று சிறிய கடப்பாரை மூலம், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால், கடப்பாரையை அங்கேயே போட்டு விட்டு, திருடர்கள் தப்பியோடி விட்டனர்.
மணிகண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

