ADDED : ஜூன் 14, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காசு வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மூங்கில்பட்டில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூங்கில்பட்டு தீபன், 32; அன்புகுமார், 32; சோம்பட்டு பிரசாத், 28; ஆகிய மூவரை கைது செய்து, 15 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.