sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு

/

மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு

மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு

மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு


ADDED : ஜன 10, 2024 12:14 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார : காயல்மேடு பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி இரவு பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. வானுார் அடுத்த கிளியனுார் பகுதியில் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

கிளியனுார், கொஞ்சிமங்கலம், எடச்சேரி, கிளாப்பாக்கம், வங்காரம், காயல்மேடு, தலக்காணிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவ அறுவடைக்கு தயாரான 3,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இப்பகுதிகளை நேற்று வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர், உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஆத்மா அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us