/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
/
அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 23, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளை பூரணி, பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 21ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரஹ ஹோமங்கள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல் கால யாக சாலை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு கோ பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

