sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு

/

ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு

ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு

ஆற்றில் மூழ்கியவர் உடல் மீட்பு


ADDED : ஜன 21, 2024 04:40 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆற்றுத் திருவிழாவின் போது தென்பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் நேற்று மீட்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் பிரபாகரன், 33; கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனபாக்கியம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகள்கள், 5 வயது மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவிற்கு பிரபாகரன் குடும்பத்துடன் சென்றவர் ஆற்றுநீரில் குளித்தார். பின், தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பியவர் தொடர்ந்து ஆற்றில் குளித்தார்.

இரவு வெகுநேரமாகியும் பிரபாகரன் வீட்டிற்கு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆற்றில் தேடினர். அங்கு அவர் குளித்த இடத்தில் சட்டை, லுங்கி கரைமேல் இருந்தது.

நீரில் மூழ்கி இருக்காலம் என சந்தேகத்தின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் தேடி கிடைக்கவில்லை. இன்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிடாகம் ஆற்றின் கரையோரம் மிதந்த பிரபாகரன் உடலை மீட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us