/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் கணவன், மனைவியைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் தர்மதுரை, 31; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுதாகர். இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுதாகர், அவரது 2 மகன்கள் சேர்ந்து தர்மதுரை இவரது மனைவி சுதா ஆகியோரை திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் சுதாகர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

