
விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டியில் டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, டோல் பிளாசா திட்ட மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார். மேலாளர் சொர்ணமணி வரவேற்றார்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் முகாமைத் துவக்கி வைத்தார்.முகாமில், கார், வேன், பஸ் டிரைவர்கள், போலீசார் மற்றும் டோல் கேட் ஊழியர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்து டிரைவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் பத்மநாபராவ், புற்று நோய் தடுப்பு குறித்த கருத்தினை டிரைவர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
டாக்டர் நித்யா, சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ், கண் பரிசோதகர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

