/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ மீது ஜீப் மோதி ஒருவர் பலி
/
ஆட்டோ மீது ஜீப் மோதி ஒருவர் பலி
ADDED : ஜன 24, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம், பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் மாணிக்கம், 42; இவர், நேற்று முன்தினம் தனது ஆட்டோவை முத்தாம்பாளையம் சாலையில் ஓட்டிச்சென்ற போது, பின்னால் வந்த மகேந்திரா போலிரோ ஜீப் மோதியது.
இதில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

