sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : செப் 10, 2025 08:58 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் கனகசபை, 26; ஐ.டி.ஐ., படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு, கனகசபைக்கும் திருவெண்ணெய்நல்லுார் அருகே குமாரமங்கலத்தை சேர்ந்த கோவிந்தராஜ்,37; என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, கோவிந்தராஜ், தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும், உனக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கனகசபையிடம் கூறியுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என கூறியதால், இதை நம்பி கனகசபை, பல தவணைகளாக ரூ.30 லட்சத்தை கோவிந்தராஜியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றவர் கனகசபைக்கு அரசு பணி வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதேபோல், விழுப்புரம் அருகே கோனுார் கிராமத்தை சேர்ந்த விஜயன்,30; என்பவரிடம், மின் வாரியத்தில் அரசு பணி வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.

கனகசபை, விஜயன் ஆகியோர் தனித்தனியாக, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பதுங்கி இருந்த கோவிந்தராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us