sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் எதிரில் நடந்த கொலை வழக்கு - அனைவரும் விடுதலை

/

மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் எதிரில் நடந்த கொலை வழக்கு - அனைவரும் விடுதலை

மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் எதிரில் நடந்த கொலை வழக்கு - அனைவரும் விடுதலை

மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் எதிரில் நடந்த கொலை வழக்கு - அனைவரும் விடுதலை


ADDED : ஜூன் 26, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் எதிரில் நடந்த முருகானந்தம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

திண்டிவனம் தொகுதியில், 2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வேட்பாளராக சண்முகமும், அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில் அப்போதைய தலைமை நிலைய செயலாளர் கருணாநிதியும் போட்டியிட்டார். தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த 8.5.2006 அன்று அ.தி.மு.க., - பா.ம.க.,விற்கும் இடையே, தொகுதியில் பல இடத்தில் மோதல் நடந்தது. அன்று இரவு, திண்டிவனம் மொட்டையப்பிள்ளை தெருவில் காரில் வந்த கும்பல், சண்முகம் வீட்டின் மீது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியது.

தாக்குதலை தடுக்க முயன்ற அ.தி.மு.க., தொண்டர் முருகானந்தம், 39; மர்ம கும்பால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இவரது மருமகன் டாக்டர் பரசுராமன் உள்ளிட்ட 5 பேர் பெயர் நீக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2012ம் ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 20 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் இறந்து விட்டதால், 15 பேர் மட்டும் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நிருபிக்கவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்வதாக அறிவித்தார். சி.பி.ஐ., தரப்பில் வழக்கறிஞர் ஆண்ட்னிவிஜயன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us