/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை வழிபாடு
/
மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை வழிபாடு
ADDED : ஜன 21, 2024 04:37 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். மலைக்கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து படையல் இட்டனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.
இதேபோன்று, தென்பசியார் பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் வழிபாட்டிற்கு பின்னர் மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

