நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே கூலி தொழிலாளி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ்குமார், 24; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

