ADDED : பிப் 02, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன் மகன் ராஜி, 32; இவரது மனைவி ஸ்ரீஜா, 24; இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஸ்ரீஜா கடந்த 27ம் தேதி மதியம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்றார் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜி அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

