sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

/

கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை


ADDED : மார் 26, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு:

திருவிழா நடக்கும் கோயில்களில் மைக்செட், அலங்கார விளக்குகள் அமைக்கும் போது கோயில் மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தி மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும். திருவிழாவிற்காக அலங்கார பந்தல், மைக்செட், அலங்கார விளக்குகள் அமைக்கும் போது மேல்நிலை மின்சார கம்பிகளில் இருந்து போதுமான இடைவெளி விடுவதை உறுதி செய்ய வேண்டும்.

திருவிழாக்கள், கோயில் கொடை நிகழ்ச்சிகளில் தேர் பவனி, சப்பரம் துாக்கும் போது எக்காரணம் கொண்டும் மின்கம்பிகளை கம்பினாலோ, இதர பொருட்களினாலோ துாக்குவதை தவிர்க்க வேண்டும்.

தேர் பவனி, சப்பரம் துாக்கும் நிகழ்வுகளில் திருவிழா கமிட்டியினர் தேர் சப்பரத்தின் உயரம் குறித்த விவரங்களையும், அவை சுற்றி வரும் தெருக்கள், பாதைகள் குறித்து விபரங்களையும் 10 நாட்களுக்கு முன்பே அப்பகுதி மின்வாரிய பொறியாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்து பாதுகாப்பான தேர், சப்பர பவனியை உறுதி செய்ய வேண்டும்.

விழாக்களுக்கு தேர் பவனிக்கு ஜெனரேட்டர் பயன்படுத்தும் பட்சத்தில் உரிய தீ தடுப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us