sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்கள்

/

வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்கள்

வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்கள்

வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கும் பஸ்கள்


ADDED : ஜன 21, 2024 03:05 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அனைத்து பஸ்களும் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தும் ஏற்படுகிறது. மேலும் வெயில், மழை காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், அரசு பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள்செயல்பட்டு வருகின்றன.மேலும் வெம்பக்கோட்டையை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

வெம்பக்கோட்டை, சுற்று பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சந்தையாகவும் இருப்பதால், எப்போதும் மக்கள் அதிக அளவில் பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சிகளின் மக்களுமே இங்கு பல்வேறு தேவைகளுக்கும் வருகின்றனர்.

வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம், சாத்துார், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம் போன்ற நகரங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது.

காலை, மாலை நேரங்களில் வெளியூர்களில் இருந்து அரசு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், பட்டாசு தொழிலாளர்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெம்பக்கோட்டைக்கு பஸ்களில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு, தனியார் பஸ்கள் வெம்பக்கோட்டையில் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகிறது.

மழை, வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடமின்றி ரோட்டிலும், கடைகளின் ஓரமும் நிற்க வேண்டியுள்ளது.

வெம்பக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட்டும், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால்பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே வெம்பக்கோட்டையில் விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us