ADDED : ஜன 14, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி என். ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் கருப்பையா,59, இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
4 நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தன் பைக்கில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, வண்டி நிலை தடுமாறியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-

