sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு

/

சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு

சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு

சர்வதேச அறிவியல் திருவிழா விருதுநகர் ஆசிரியர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 24, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : இந்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை என்.ஐ.எப்., இணைந்து ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடத்திய 9வது சர்வதேச அறிவியல் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மல்லாங்கிணர்,பந்தல்குடி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஜன. 17 முதல் 20 வரை ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த விழாவில் 17 விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் உபகரணங்களை உருவாக்கவும், என்.இ.பி., 2020 அடிப்படையில் கற்றல், கற்பித்தல் முறை, ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.

கென்யா, லாவோஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் கல்வியாளர்கள், ஐ.ஐ.டி., என்.சி.இ.ஆர். டி., கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்திய அளவில் 150 ஆசிரியர்களில் 16 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.

அதில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் ராம்குமார், பந்தல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெயபால் கலந்து கொண்டனர். கலெக்டர் ஜெயசீலன், சி.இ.ஓ., வளர்மதி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us