sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி

/

ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி

ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி

ஒன்றியத்திற்குள் இடமாற்றம் ஊராட்சி செயலர்கள் நிம்மதி


ADDED : ஜன 19, 2024 04:22 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தந்த ஒன்றியத்திற்குள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி செயலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள நிலையில் ஊராட்சி செயலர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். இதில் ஒரு சில ஊராட்சி செயலர்கள் செய்த தவறுகள், அவர்கள் மீதான புகார்கள், கிராமங்களில் அலட்சியப் போக்குடன் செயல்படுவது போன்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிய வந்தது. இதில் பல இடங்களில் செயலாளர்களின் உறவினர்களே தலைவராக இருப்பது மக்களுக்கு பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றிய செயலர்கள் உட்பட அனைவரையும் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்கு ஊராட்சி செயலர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. ஊராட்சி தலைவர்கள் தரப்பிலும் செயலர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு இடமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டு, அந்தந்த ஒன்றியத்திற்குள் மட்டுமே ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஊராட்சி செயலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us