sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 19, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடு மேய்த்தவர் பலி

சாத்துார் : சாத்துார் கலிங்கபட்டி சோனமுத்து, 39. நேற்று முன்தினம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மயங்கி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

கோஷ்டி மோதல் : 6 பேர் காயம்

21 பேர் மீது வழக்கு

சாத்துார் : வெம்பக்கோட்டை உப்பு பட்டியைச் சேர்ந்தவர் உமேஷ் , 19. இந்திரா நகரை சேர்ந்தவர் அருண், 19. இவர்கள் அங்குள்ள கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 8 பேர் காயம் அடைந்தனர். இருதரப்பையும் சேர்ந்த 21 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சிறுமியை கடத்தி திருமணம்

ஆட்டோ டிரைவர் மீது போக்சோ

சிவகாசி : சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கையை பள்ளிக்கு ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் சிவ செல்வகுமாருடன் 24, சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் பலமுறை ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில் அவர் சிறுமியை கடத்தி திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இருவரிடையே ஏற்பட்ட தகராறில் சிறுமியை அடித்துள்ளார். சிவகாசி மகளிர் போலீசார் சிவ செல்வகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

----- சிறுமி மாயம்

சிவகாசி : சிவகாசி பள்ளப்பட்டி மாரியம்மன் நகரை சேர்ந்த 17 வயது சிறுமி மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு அவருடன் சென்ற போது பெற்றோர் அறிவுரை கூறி அவரை அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.---






      Dinamalar
      Follow us