ADDED : ஜன 19, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் எஸ்.ஐ.கணேசன் நேற்று முன்தினம் நள்ளிரவு இடையபொட்டல் தெருவில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது ஆராய்ச்சிப்பட்டி தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவர் தினேஷ் பாண்டியன் 20, டூவீலரில் அதிவேகத்தில் வந்துஉள்ளார்.
அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் ஏற்பட்ட தகராறில், எஸ்.ஐ.யை தினேஷ் பாண்டியன் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்துஉள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.

