/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பள்ளி முன் கழிவு நீர் தொற்று பாதிப்பில் மாணவர்கள்
/
அரசு பள்ளி முன் கழிவு நீர் தொற்று பாதிப்பில் மாணவர்கள்
அரசு பள்ளி முன் கழிவு நீர் தொற்று பாதிப்பில் மாணவர்கள்
அரசு பள்ளி முன் கழிவு நீர் தொற்று பாதிப்பில் மாணவர்கள்
ADDED : ஜூன் 25, 2025 07:57 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்காக புதிதாக வாறுகால் கட்டப்பட்டது. ஆனால் மேல்நிலைப்பள்ளி முன்புறம் அமைக்கப்பட்ட வருகாலில் கழிவுநீர் வெளியேற வழியின்றி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாறுகாலில் வருகின்ற கழிவுநீர் வெளியேறாமல் பள்ளி முன் ஒரே இடத்தில் தேங்கி விட்டது. இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர தொற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி முன்புறம் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.