ADDED : ஜன 14, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி நாலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமுக்காளை மகன் தனுஷ்கோடி 27. நேற்று காலை கட்டாலங்குளம், சீனிமடை கிராமங்களைச் சேர்ந்த 11க்கும் மேற்பட்ட பெண்களை மினி வேனில் ஏற்றிக் கொண்டு கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியில் விவசாய பணிக்காக சென்றார்.
நரிக்குடி- திருப்புவனம் ரோட்டில் ஆண்டுகொண்டான் அருகே வந்தபோது நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சுழி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டாலங்குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி 36, சிகிச்சை பலனின்றி இறந்தார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

