ADDED : ஜன 21, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் நேற்று சென்னை விமான நிலையம் வந்தனர்.
தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 மீனவர்களை, கடந்த டிச., 9ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர்.
இலங்கை நீதிமன்றம், 32 மீனவர்களையும் விடுதலை செய்து, இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
இலங்கையில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானத்தில், 32 மீனவர்களும் சென்னை வந்தனர்.
அவர்களை, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின், தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் வாயிலாக, சொந்த ஊர்களுக்கு மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

