ADDED : ஜன 18, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் '108' ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த, புதிதாக வாங்கப்பட்டுள்ள 75 வாகனங்கள் மற்றும் 98 நவீன செயற்கை சுவாசக் கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
l மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில், அதிகனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய, '108' ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மோகன், ராஜா, அரவிந்த்குமார், சந்தனமாரியப்பன் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
l யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்களில், காலியாக உள்ள 59 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

