sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்

/

முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்

முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்

முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்


ADDED : ஜன 24, 2024 12:09 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மருத்துவ படிப்புகளுக்கு முன்வைப்புத் தொகை செலுத்தியவர்களில், 979 பேரின் வங்கி கணக்குகள் தவறாக இருப்பதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் நிரப்புகிறது.

இதில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடங்கள் பெறுவோர், பாதியில் போவதை தடுக்க, அவர்களிடம் முன்வைப்பு தொகையாக, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஒருவேளை கவுன்சிலிங்கில் இடங்கள் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு மூன்று மாதத்திற்குள், செலுத்திய பணம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

கடந்த 2023 - 24ல் அப்படி பணம் செலுத்தியவர்களில், 979 மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் தவறாக உள்ளதாகவும், அவர்களது பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அவர்கள் மீண்டும், ddugselcom@gmail.com என்ற மின்னஞ்சலில், பிப்., 5ம் தேதிக்குள் சரியான கணக்கு விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், மருத்துவக் கல்வி இயக்கம் பொறுப்பேற்காது என கூறப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு, tnmedicalselection.net/news/23012024024329.pdf என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.






      Dinamalar
      Follow us