sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வணிக உரிமம் புதுப்பிப்பில் மாற்றம் தேவை

/

வணிக உரிமம் புதுப்பிப்பில் மாற்றம் தேவை

வணிக உரிமம் புதுப்பிப்பில் மாற்றம் தேவை

வணிக உரிமம் புதுப்பிப்பில் மாற்றம் தேவை


ADDED : ஜன 21, 2024 02:21 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வணிக உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில், மாற்றம் செய்ய வேண்டும் என, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில், வணிகர்கள் வலியுறுத்தினர்.

தமிழக அரசு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர், வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:

அரசு பணியாளர்களுக்கு இணையாக குடும்பநல நிதி, காப்பீடு, பேரிடர் வெள்ள நல நிதி போன்றவற்றை வணிகர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். வணிக உரிமங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுவதை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வகை செய்ய வேண்டும்.

வணிகர்களை தாக்கும் சமூக விரோதிகள், ஜாமினில் வர முடியாதபடி சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

'கிரெடாய்' புறக்கணிப்பு

கிரெடாய் தமிழக பிரிவு தலைவர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான கூட்டு மதிப்பு நிர்ணய குளறுபடியால், வீடுகள் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், தீர்வு காணப்படவில்லை. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றாலும், எந்த பயனும் ஏற்படாது என்று கருதுவதால், கூட்டத்தில் கிரெடாய் பங்கேற்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us