sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

/

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

5


UPDATED : ஜூன் 30, 2025 12:51 PM

ADDED : ஜூன் 30, 2025 11:32 AM

Google News

5

UPDATED : ஜூன் 30, 2025 12:51 PM ADDED : ஜூன் 30, 2025 11:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தொழில்துறை மேம்பாடு என்பது ஒரு வீண் வேலைத்திட்டம் அல்ல. இது இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்புக்கான பொருளாதார சமத்துவத்திற்கான பணியாகும்.

முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல விரும்புகின்றனர். தி.மு.க., அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நமது தொழில்துறை செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள்.

இளைஞர்கள் வெளியேறுகின்றனர். இதை மாற்ற அ.தி.மு.க., உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சியை தமிழகம் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு நின்றுவிடுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us