sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: இன்றைய விலை சவரன் 89 ஆயிரம் ரூபாய்!

/

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: இன்றைய விலை சவரன் 89 ஆயிரம் ரூபாய்!

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: இன்றைய விலை சவரன் 89 ஆயிரம் ரூபாய்!

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: இன்றைய விலை சவரன் 89 ஆயிரம் ரூபாய்!


UPDATED : அக் 06, 2025 05:32 PM

ADDED : அக் 06, 2025 09:53 AM

Google News

UPDATED : அக் 06, 2025 05:32 PM ADDED : அக் 06, 2025 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்தது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1400 அதிகரித்துள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்று (அக்., 06) காலையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.11 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது.

மாலையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 65 என ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ, 89,000 ஆக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ, 11,125க்கு விற்பனையாகிறது.

இன்று ஒருநாளில் மட்டும் இருமுறை என மொத்தம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1400 அதிகரித்து இருப்பது, நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us