sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

இந்த வாரம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்


UPDATED : ஜன 19, 2024 11:02 AM

ADDED : ஜன 19, 2024 01:52 AM

Google News

UPDATED : ஜன 19, 2024 11:02 AM ADDED : ஜன 19, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (19.1.2024 முதல் 25.1.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்


கேது, சுக்கிரன், சூரியன், சனி நன்மைகளை வழங்குவர். சூரிய வழிபாடு சுபிட்சம் தரும்.

அசுவினி: கடந்த வார நெருக்கடி நீங்கும். ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். உங்கள் விருப்பம் நிறை வேறும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரணி: ஒன்பதாமிடத்தில் உங்கள் நட்சத்திர நாதனும் பத்தாமிடத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் இந்த வாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திர நாதன் பத்தாமிடத்திலும், சனி பகவான் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அரசு வழி செயல்களில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு பொன் பொருளுடன் வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

ரிஷபம்


சுக்கிரன், புதன், ராகு நன்மைகளை வழங்குவர். சிவபெருமானை வழிபட சங்கடம் தீரும்.

கார்த்திகை 2,3,4: வாரத்தின் முதல் நாளில் செலவு அதிகரிக்கும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். காரியம் கை கூடும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

ரோகிணி: பதினொன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். சங்கடம் விலகும். எதிர்ப்பு இல்லாமல் போகும். பாக்கிய ஸ்தான சூரியனால் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். புதிய முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தான சனியும் லாப ராகுவும் உங்கள் செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணம் வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.

மிதுனம்


சனி, குரு நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட வளம் உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: லாப குருவால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சனிக்கிழமை முதல் திங்கள் வரையில் செலவு அதிகரிக்கும். புதிய முயற்சி இழுபறியாகும்.

திருவாதிரை: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் செயல்களில் சாதகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் ஆதாயத்தை நோக்கிச்செல்லும். ஞாயிறு, திங்களில் எதிர்பாராத செலவு தோன்றும்.

புனர்பூசம் 1,2,3: ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் சுக்கிரனால் மற்றவரால் சில சங்கடம் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம். இன்று அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஒன்பதாமிட சனியால் சங்கடம் விலகும். திங்களன்று எதிர்பாராத செலவு தோன்றும்.

கடகம்


கேது, புதன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் போகும்.

புனர்பூசம் 4: நேற்று இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். இன்று உங்களுக்கு ஒரு அசாத்திய துணிச்சல் உண்டாகும். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்த செயல் நிறைவேறும். திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் செலவுகளில் கவனம் தேவை.

பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் புதனும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். செவ்வாய் அன்று செலவுகளில் கவனம் தேவை.

ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களின் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதன் அன்று செலவு தோன்றும்.

சிம்மம்


சுக்கிரன், சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். துர்கையை வணங்கி வழிபட்டுவர சங்கடம் விலகும்.

மகம்: உங்கள் ராசி நாதன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்ப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாழன் அன்று விரயச்செலவு அதிகரிக்கும்.

பூரம்: ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திரநாதனும், ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகளில் லாபம் ஏற்படும்.

உத்திரம் 1: உங்கள் நட்சத்திர, ராசிநாதன் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். ஆற்றல் அதிகரிக்கும், எதிர்ப்பு விலகும், வழக்கு சாதகமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

கன்னி


சனி நன்மைகளை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

உத்திரம் 2,3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல் குளறுபடியாகும். சனி பகவானின் சஞ்சார நிலையால் முயற்சியில் லாபம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். சங்கடம் நீங்கும்.

அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் செயல்களில் டென்ஷன் அதிகரிக்கும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அதன்பின் நான்காமிட புதனால் யோசித்து செயல்படுவீர். முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும்.

சித்திரை 1,2: வாரத்தின் தொடக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். அதன்பின் நான்காமிட சுக்கிரனாலும், ஆறாமிட சனியாலும் வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும். வெளி வட்டாரத்தில் சாதுரியமாக செயல்பட்டு வெற்றி அடைவீர்.

சந்திராஷ்டமம்

18.1.2024 காலை 7:57 மணி - 20.1.2024 காலை 11:14 மணி



துலாம்


சுக்கிரன், செவ்வாய், ராகு, குரு நன்மைகளை வழங்குவர். வராகியை வழிபட வளம் உண்டாகும்.

சித்திரை 3,4: ஏழாமிட குருவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சனிக்கிழமை அன்று சில சங்கடங்களுக்கு ஆளாவீர்.

சுவாதி: கடந்த வார நிலையில் மாற்றம் ஏற்படும். மூன்றாமிட செவ்வாயால் முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிறு அன்று உங்கள் செயல்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

விசாகம் 1,2,3: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செலவு பல வழியிலும் அதிகரிக்கும். ஆறாமிட ராகுவால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். ஏழாமிட குருவால் தொட்டதெல்லாம் வெற்றியாகும். திங்கள் அன்று சில நெருக்கடி உண்டாகும்.

சந்திராஷ்டமம்

20.1.2024 காலை 11:15 மணி - 22.1.2024 மாலை 5:49 மணி



விருச்சிகம்


சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவர். திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வர வளமுண்டாகும்.

விசாகம் 4: மூன்றாமிட சூரியனால் முயற்சி லாபமாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். எதிரிகள் விலகிச் செல்வர். லாபஸ்தான கேதுவால் வரவு அதிகரிக்கும். முயற்சி அனுகூலமாகும். திங்கள் அன்று செயல்களில் கவனம் தேவை.

அனுஷம்: லாப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருப்பதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டுத்தொடர்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். செவ்வாய் அன்று குடும்பத்திற்கு விழிப்புணர்வு அவசியம்.

கேட்டை: கடந்த வாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். உங்கள் தேவைகளை எளிதாக அடைவீர். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்ட செயல் விருப்பப்படி நடந்தேறும். புதன் அன்று சில தடை உண்டாகும்.

சந்திராஷ்டமம்

22.1.2024 மாலை 5:50 மணி - 25.1.2024 அதிகாலை 2:11 மணி



தனுசு


சுக்கிரன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். ராமநாத சுவாமியை வழிபட தடை விலகும்.

மூலம்: மூன்றாமதிபதி பலம் பெற்றுள்ளதால் உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். வியாழன் அன்று உங்கள் செயல்களில் கவனம் அவசியம்.

பூராடம்: ஐந்தாமிட குருவும், ஜென்ம சுக்கிரனும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளின் நிலை உயரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

உத்திராடம் 1: சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். வேலை வாய்ப்பிற்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.


சந்திராஷ்டமம்

25.1.2024 அதிகாலை 2:12 மணி - 27.1.2024 மதியம் 12:47 மணி



மகரம்


ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். சனீஸ்வர வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

உத்திராடம் 2,3,4: மூன்றாமிட ராகுவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். சந்திரனின் சஞ்சார நிலைகளால் சாதுர்யமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை உயரும்.

திருவோணம்: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: சுக்கிரனின் சஞ்சார நிலையால் தொழில், வியாபாரம் லாபமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும்புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர். நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்


செவ்வாய் நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு சங்கடம் போக்கும்.

அவிட்டம் 3,4: ராசிக்குள் சனி சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சந்திரனின் சஞ்சாரங்களால் எதிர்பார்த்த வரவு வரும். பொருளாதார நிலை உயரும்.

சதயம்: தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் உயரும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பூரட்டாதி 1,2,3: சந்திரனின் சஞ்சார நிலை உங்கள் சங்கடத்தை தீர்க்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாய வேலைகளை முடித்துக் கொள்வீர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற எண்ணம் நிறைவேறும்.

மீனம்


குரு, புதன், சூரியன் நன்மையை வழங்குவர். விநாயகப் பெருமானை வழிபட சங்கடம் குறையும்.

பூரட்டாதி 4: தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசி நாதனால் பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

உத்திரட்டாதி: ராசிக்குள் ராகு ஏழில் கேது சஞ்சரித்து உங்கள் மனம், செயல்களில் தடுமாற்றங்களை ஏற்படுத்தினாலும், லாப ஸ்தான சூரியனும், குடும்ப ஸ்தான குருவும் கவுரவத்தை பாதுகாப்பர். செல்வாக்கை உயர்த்துவர்.

ரேவதி: ராகுவும், கேதுவும் மனதை அலைபாய வைப்பதால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். ஆனால் குரு, சூரியன், சந்திரன் சஞ்சாரங்களினால் பண வரவில் இருந்த தடை விலகும். அரசுவழி முயற்சி லாபமாகும். மனதில் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us