sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தை பிறந்தால் வழி பிறக்கும்; தமிழர் வாழ்வு மலரும்!

/

தை பிறந்தால் வழி பிறக்கும்; தமிழர் வாழ்வு மலரும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்; தமிழர் வாழ்வு மலரும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்; தமிழர் வாழ்வு மலரும்!


ADDED : ஜன 13, 2024 11:18 PM

Google News

ADDED : ஜன 13, 2024 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற பாரதியார் பாட்டிற்கு ஏற்ப, மொழியாலும், கலாசாரத்திலும் பிரிந்திருந்தாலும் நாம், சிந்தனையில் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். அதற்கு உலகம் முழுதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள் சிறந்த சான்று.

தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படுவதைப் போலவே, பல மாநிலங்களில், மகர சங்கராந்தி என்ற பெயரில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் லோஹ்ரி என்ற பெயரிலும், அசாமில் மாஹ் பிகு என்ற பெயரிலும் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, மொரீஷியஸ் என்று தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

காய்கறிகள்


உழைக்கும் மக்கள், இயற்கையை தெய்வ மாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகை தான், பொங்கல் திருநாள்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம் முன்னோர் வாக்குப்படி, தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி, இயற்கைக்கும், நமக்கும் உறுதுணையாக இருக்கும் மற்ற உயிர்களுக்கும், நம் நன்றியை தெரிவிக்கிறோம்.

தமிழக மக்கள் தாமே கண்டுணர்ந்து, தம் உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா இது.

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, வீட்டிற்கு எடுத்து வந்து தம் உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் முதல் நாள் தைப்பொங்கல்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து, குளித்து, புத்தாடை உடுத்தி, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு, அதன் நடுவில் பானை வைத்து புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து மஞ்சள் கொத்தையும் கரும்பை யும் காய்கறிகளையும் வைத்து வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி கொண்டாடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு


போகி பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சி யாக பொங்கலின் மகிழ்ச்சி தொடர்கிறது.

அதுபோலவே தமிழக மக்களின் பாரம்பரிய நடனம், இசை என கலாசார கொண்டாட்டங்களும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம், சேவல் சண்டை என விளையாட்டுப் போட்டிகளும், தமிழகம் முழுதும் களைகட்டுகின்றன.

தமிழகத்தின் பெருமை யான ஜல்லிக்கட்டுக்குத் தடை ஏற்பட்டபோது, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுத்தது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு.

தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்ட நம் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியின் பெருமைகளையும் திருக்குறளின் சிறப்பையும் உலக அறிய செய்து வருபவர்; தமிழ் மக்களின் பாரம்பரிய சிறப்பையும், பண்பாட்டு செறிவையும் செல்லும் இடமெல்லாம் சொல்லி வருபவர்.

பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் இருக்கையும் அமைக்க ஏற்பாடு செய்தார்.

திருக்குறள் மீது தீரா பற்று கொண்ட பிரதமர், பல மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தொன்மைவாய்ந்த கணியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முழக்கத்தை, உலகமே கேட்கும் வகையில், நம் பிரதமர் முழங்கினார்.

சதுரங்க விளையாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கியதுடன், இந்தியாவின் செஸ் தலைநகராக தமிழகம் விளங்குவதாகவும் செஸ் ஒலிம்பி யாட் போட்டியில் புகழ்ந்துரைத்தார்.

வீடுதோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் மிஷன், அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன்தன் யோஜ்னா, இளைஞர்களின் மேம்பாட்டிற்காக ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் தமிழக மக்களை பெருமளவில் சென்றடைந்துஉள்ளன.

சுய சார்பு, பெண் குழந்தைகளுக்கான படிப்பு திட்டம், சாதாரண மக்களுக்கும் வங்கிக்கடன் வழங்கும் முத்ரா யோஜ்னாவும், அடுப்பு ஊதும் பெண்களின் துயர் துடைக்கும் உஜாலா திட்டமும் தமிழக மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் வெற்றியையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

பொற்கால ஆட்சி


அது மட்டுமல்லாமல், தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியையும், மத்திய அரசு வழங்கி வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகம் 10.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெற்று உள்ளது.

இது கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகம் அளித்த வரியை விட இரண்டு மடங்கு அதிகம்.

தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அள்ளித் தரும் பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி தொடர தமிழக மக்கள், பேராதரவு வழங்குவர்; தமிழக மக்களின் வாழ்வில் புத்தொளி பாயும்.






      Dinamalar
      Follow us