sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

/

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை; அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை

1


ADDED : மார் 26, 2025 06:56 AM

Google News

ADDED : மார் 26, 2025 06:56 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு, 100 அடியில் சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - வைத்திலிங்கம்: தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், 1972ம் ஆண்டு ராஜராஜ சோழனுக்கு அப்போதைய முதல்வர் சிலை வைக்க முயன்றார்.

தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால், கோவிலுக்கு வெளியே சிலை வைக்கப்பட்டது. மாமன்னன் ராஜராஜ சோழன் கப்பல் படையை உருவாக்கியவர். இந்திய கடற்படைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், 216 அடி உயரத்தில் கோவில் கட்டிய அவருக்கு, 100 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும். ஹிந்து அறநிலையத் துறையால் அமைக்க முடியாவிட்டாலும், அரசு சிலை அமைத்துத்தர வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு: ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டு சதய விழா எடுத்தவர் கருணாநிதி. சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பிருந்தால், சிலை வைப்பதற்கு அறநிலையத் துறை பணிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us