sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

25ல் தைப்பூச நாளில் பத்திரப்பதிவு உண்டு

/

25ல் தைப்பூச நாளில் பத்திரப்பதிவு உண்டு

25ல் தைப்பூச நாளில் பத்திரப்பதிவு உண்டு

25ல் தைப்பூச நாளில் பத்திரப்பதிவு உண்டு


ADDED : ஜன 23, 2024 10:20 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தைப்பூச நாளான வரும் 25ம் தேதி, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 10 அலுவலகங்கள் மட்டுமே சனிக்கிழமையும் செயல்படுகின்றன. இந்நிலையில், சுப முகூர்த்த நாட்கள், தமிழ் புத்தாண்டு, ஆடிபெருக்கு, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில், பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.

மேலும், இந்நாட்களில் பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் கூடுதல் வருவாயும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் வைத்து தமிழ் புத்தாண்டு, ஆடி பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டாலும், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், தைப்பூச நாளான, வரும் 25ல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அன்றைய தினம் அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கூடுதல் டோக்கன் வழங்கலாமா என்பது குறித்த பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.

மேலும், விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான, 350 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி, பொது மக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று,பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us