sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 25, 1915

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, சபாபதி சின்னத்தம்பி பிள்ளையின் மகனாக, 1915ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.ராஜரத்தினம்.

இவரது தந்தை, குடும்பத்துடன் மலாய் சென்று, அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்தார். இவர் அங்குள்ள கல்வி நிலையங்களில் படித்தார்.

பின், லண்டன் சென்று சட்டம் படித்த போது, பிரிட்டிஷாரின் ஆதிக்க உணர்வுகளை அறிந்தார். மலாய் வந்து, மலாயன் டிரிப்யூனலில் பணியாற்றினார். 'சிங்கப்பூர் ஸ்டாண்டர்டு' பத்திரிகையின் ஆசிரியராகி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எழுதி விடுதலை உணர்வை ஊட்டினார்.

மலாயன் கருத்தரங்கம் நடத்திய டேவிட் மார்ஷல், வழக்கறிஞராக இருந்த லீ குவான் யூ, சமத் இஸ்மாயில், தேவன் உள்ளிட்டோருடன் இணைந்து போராடியதுடன், 'மக்கள் செயல் கட்சி'யை துவக்கினார். சிங்கப்பூரை தனி நாடாக்கி, லீ குவான் யூவை பிரதமராக்கினார். இவரும் வெளியுறவு, கலாசாரத் துறை அமைச்சராகி சிங்கப்பூரை வளர்ந்த நாடாக்கிய இவர், 2006, பிப்ரவரி 22ல், தன், 91வது வயதில் மறைந்தார்.

சிங்கப்பூரை செதுக்கிய தமிழர் பிறந்த தினம் இன்று!




    • Dinamalar Events


    Dinamalar