sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்

/

உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்

உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்

உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாதீர் பா.ம.க., பொருளாளர் வேண்டுகோள்


ADDED : ஜூன் 15, 2025 07:09 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''உட்கட்சி பிரச்னையில் கவனம் செலுத்தாமல், பா.ம.க., நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்'' என மாநிலப் பொருளாளர் சையத் மன்சூர் உசேன் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரையில் பா.ம.க., சார்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், சிறப்பு செயற்குழுக் கூட்டம் செயலாளர் கிட்டு தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மத்திய மாவட்டச் செயலாளர் பாரதி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

சையத் மன்சூர் உசேன் பேசியதாவது:

ராமதாஸ், மற்ற ஜாதியினர், இஸ்லாமியர், அருந்ததியர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறார். ஆனால் பா.ம.க., 'வன்னியர்களுக்கான கட்சி' என பேசுகின்றனர்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கினார். ஒவ்வொரு திட்டங்களையும் ராமதாஸ் சொல்ல, அன்புமணி செயல்படுத்தினார்.

கட்சிக்குள் நடப்பதை ராமதாஸ் கூறுகிறார். அதை திரித்து, அவர் மீது பழி போடும் வகையில், பா.ம.க.,வில் உட்கட்சி பிரச்னை உள்ளதாக ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் கவனம் செலுத்தாமல் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us