sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை

/

பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை

பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை

பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை


ADDED : ஜன 23, 2024 12:53 AM

Google News

ADDED : ஜன 23, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணிக்கம்பாளையம் : ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முஸ்தாகீர், 28, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க முயற்சித்ததாக கைதானார்.

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. குழுவினர், 2022 ஜூலையில் இவரிடம் ரகசிய விசாரணை நடத்தி, ௧௦ பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், முஸ்தாகீருடன் ஈரோட்டுக்கு வந்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது தந்தை மகபூப் மற்றும் சகோதரர் வீட்டில் இருந்தனர்.

அரை மணி நேரம் சோதனை நடந்தது. எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. பின், கோவை மத்திய சிறையில் முஸ்தாகீர் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us