sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை

/

'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை

'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை

'பாரத் ஆட்டா' கோதுமை மாவு கூட்டுறவு அங்காடியில் விற்பனை


ADDED : ஜன 18, 2024 10:43 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வட மாநிலங்களில் வசிக்கும் மக்களின் உணவில் கோதுமை, தென் மாநிலங்களில் அரிசி பயன்பாடு அதிகம் உள்ளன. சமீபகாலமாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தமிழகத்திலும் கோதுமை பயன்பாடு அதிகரித்துள்ளது.

வெளிச்சந்தையில் 1 கிலோ கோதுமை மாவு விலை, 50 - 60 ரூபாய் உள்ளது. அதன் விலை உயர்வை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் குறைந்த விலைக்கு கோதுமை மாவு விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பாரத் ஆட்டா கோதுமை மாவு விலை, 27.50 ரூபாய். இதற்காக, மத்திய அரசு அனுமதி அளித்துள்ள அரவை ஆலைகளுக்கு, இந்திய உணவு கழகம் குறைந்த விலைக்கு கோதுமை வழங்குகிறது.

தமிழகத்தில், 1,000 டன் பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன் விற்பனையை மேற்கொள்ள, 'நாபெட்' எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம், பாரத் கோதுமை மாவு தயாரிக்கிறது. தற்போது, கோவையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, திருப்பூரில் சில கூட்டுறவு அங்காடிகளில், பாரத் ஆட்டா கோதுமை மாவு விற்கப்படுகிறது.

சென்னையில், டி.யு.சி.எஸ்., காஞ்சி கூட்டுறவு, பூங்கா நகர் கூட்டுறவு பண்டக சாலை, வட சென்னை கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் கூட்டுறவு அங்காடிகளில் பாரத் ஆட்டா விற்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us