ADDED : செப் 22, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுதும் மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அமாவாசையையொட்டி நேற்று சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருப்பதி மலையப்ப சுவாமியாக சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள் புறப்பாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

