sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கம்பம் வரும் கேரள எம்.எல்.ஏ.,வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

/

கம்பம் வரும் கேரள எம்.எல்.ஏ.,வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் வரும் கேரள எம்.எல்.ஏ.,வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் வரும் கேரள எம்.எல்.ஏ.,வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு


ADDED : மே 25, 2025 02:56 AM

Google News

ADDED : மே 25, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:தேனிமாவட்டம் கம்பத்தில் நாளை நடைபெறும் நுால் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வரும் கேரளா பீர்மேடு இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., விற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கம்பம் தடம் நுால் வெளியீட்டு களம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நாளை (மே 26) கம்பத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமன் வர உள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறும் போது:

இடுக்கி மாவட்டத்தில் 3.5 லட்சம் தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம், போனஸ் உள்ளிட்ட உரிமைகளுக்கு குரல் கொடுக்க தோட்டத் தொழிலாளர் சங்கம் (பி.எல்.சி.) உள்ளது. இதன் தலைவராக பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமன் உள்ளார். ஆனால் இத்தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் இவர் செய்யவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து இவர் வலியுறுத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் இவர் கம்பத்தில் நாளை மாலை நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்ள வரும்போது லோயர்கேம்பில் தடுத்து நிறுத்துவோம் என்றார்.






      Dinamalar
      Follow us