UPDATED : ஜூன் 15, 2025 08:03 AM
ADDED : ஜூன் 15, 2025 07:46 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 14) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயது சிறுமி கர்ப்பம்
ஈரோடு, சூரம்பட்டி, நாராயணசாமி வீதியை சேர்ந்த பாலன் மகன் தினேஷ், 19, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார்.
மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து தினேஷ், அவரது தாய் கவுரி, சிறுமியின் பெற்றோர் என நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழிலாளிக்கு 'காப்பு'
அரியலுார் மாவட்டம், மலங்கன் குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 26; கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை, இரு ஆண்டுகளாக காதலித்து, பாலி யல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள் ளார். சிறுமி புகாரில், ஜெயங்கொண்டம் போலீசார், போக்சோ சட்டத்தில், மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது
அரியலுார் மாவட்டம், மணப்பத்துார் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ், 43. சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் பயிலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவியருக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம், பள்ளியை இழுத்து பூட்டி, ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மாண வியரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தளவாய் போலீசார், செல்வராஜை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
பிளஸ் 2 மாணவிக்கு தொல்லை
திருநெல்வேலி, மேலப்பாளையத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங் குடியை சேர்ந்த மாதேஸ்வரன், 23, என்பவருடன் பழகி வந்தார்.
'ஏசி' மெக்கானிக் வேலை பார்த்த அவர், திருநெல்வேலி வந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ராமநாதபுரம் அழைத்து சென்றுள்ளார். மேலப்பாளையம் போலீசார் சிறுமியை மீட்டனர். போக்சோவில் மாதேஸ்வரனை கைது செய்தனர்.